வாராகி அம்மன்
மனிதகுலத்தைப் பாதுகாக்கவும் அருள் புரியவும் பூமிக்கு வந்த சப்த கன்னி என்று அழைக்கப்படும் ஏழு பரலோக சகோதரிகளில் இவரும் ஒருவர் என்று நம்பப்படுகிறது. வாழ்க்கையின் ஐந்து கூறுகளுடன் தொடர்புடைய தெய்வீக பிரசன்னமாக, வராகி தேவி தனது பக்தர்களின் இதயங்களில் குறிப்பிடத்தக்க இடத்தைப் பிடித்துள்ளார்.
வாராஹி அம்மன் என்றும் அழைக்கப்படும் வராகி தேவி, தெய்வீக பெண் ஆற்றலின் சக்திவாய்ந்த மற்றும் ஆற்றல் வெளிப்பாடாக அவள் கருதப்படுகிறாள். வராகி தேவி பெரும்பாலும் பன்றியின் தலை கொண்ட தெய்வமாக சித்தரிக்கப்படுகிறாள், இது அவளுடைய மூர்க்கத்தையும் வலிமையையும் குறிக்கிறது.
பண்டாசுரனை வதம் செய்ய வேண்டி லலிதா திரிபுரசுந்தரி நால்வகை படைகளுடன் புரிந்த போரில் அனைத்திற்கும் தலைமை ஏற்றதோடு, வீசிக்கன் என்னும் அரக்கனின் உயிரைக் கவர்ந்தாள் என லலிதோபாக்யானத்தில் கூறப்பட்டுள்ளது.
வராகி தேவியின் பக்தர்கள் வலிமை, தைரியம் மற்றும் போர்களில் உள் மற்றும் வெளிப்புற வெற்றியை வழங்குவதற்கான திறனுக்காக அவளை வணங்குகிறார்கள். அவளுடைய தெய்வீக அருளின் மூலம், அவள் தன் பக்தர்களை தீய சக்திகளிடமிருந்து பாதுகாத்து, அவர்களை நீதியின் பாதையில் அழைத்துச் செல்வாள் என்று நம்பப்படுகிறது. வராகி தேவி தொடர்ந்து உத்வேகம் மற்றும் பக்தியின் ஆதாரமாகத் திகழ்கிறாள், அவளுடைய தெய்வீக இருப்பைத் தேடுபவர்களின் இதயங்களையும் மனதையும் கவருகிறாள்.
ஆஷாட நவராத்திரி
ஆனி மாதத்தில் அமாவாசைக்கு பிறகு வரும் பிரதமை திதி துவங்கி, நவமி வரையிலான காலம் ஆஷாட நவராத்திரிக் காலமாகும். ஆஷாட மாதம் என்பதை சந்திரனை அடிப்படையாகக் கொண்டது. இந்த மாதத்தில் வரும் பஞ்சமி திதியில் வாராகி அம்மனை வழிபட்டால் என்ன கோரிக்கை முன் வைக்கிறமோ, அது அப்படியே நடக்கும் என பிரமாண்ட புராணம் கூறுகிறது
பஞ்சமி திதியும் வாராகி அம்பாளும்
பஞ்சமியில் செய்யப்படும் பூஜைகளை பிரியமுடன் ஏற்று, தன்னை வழிபடும் பக்தர்களுக்கு வேண்டிய வரங்களை அள்ளிக் கொடுக்கும் தாயாக திகழ்கிறாள் வாராகி . அம்பாளை விரதமயிருந்து வழிபடுவதற்கு ஏற்ற காலங்களில் மிக முக்கியமானது நவராத்திரி காலமாகும். ஆனி மாதத்தில் வரும் ஆஷாட நவராத்திரியில் பஞ்சமிதிதி அதி விசேஷமானது ஆகும். கடன்பிரச்சனைகள் தீர , எப்படிப்பட்ட கஷ்டங்கள் ஆனாலும் தீர்வதற்கு, எதிரிகள் தொல்லை விலகுவதற்கு அம்மனை வழிபட வேண்டும். அதிலும் பஞ்சமி திதியில் வாராகி அம்மனை வழிபட்டால் உடனடிப் பலன் கிடைக்கும்.
விளக்குகடையின் ஆஷாட நவராத்திரி விழா 2023
பஞ்சலோகம், தாமிரம், பித்தளை பொருட்கள் தயாரிப்பில் நாங்கள் முன்னணி நிபுணர்கள். அனைத்து தயாரிப்புகளிலும் உங்கள் நல்வாழ்வை மேம்படுத்துவதற்கு வளங்களை ஒதுக்குவதே எங்கள் முதன்மையான அக்கறை. ஆண்டுதோறும் கொண்டாடப்படும் ஆஷாட நவராத்திரி இந்த ஆண்டும் நமது விளக்குகடையில் ஜூன் 18 ம் தேதி முதல் 28 ம் தேதி வரை கோலாகலமாக, மிகவும் பிரமாண்டமாக மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை கொண்டாடப்பட்டது. தினமும் மலர் அர்ச்சனை, குங்கும அர்ச்சனை நடத்தினோம். அம்மனுக்கு பிடித்த உணவுகள், நெய்வேதியங்கள் படைக்கப்பட்டன.
இங்கு நடந்த நவராத்திரி பூஜையில் பக்தர்கள், வாடிக்கையாளர்கள் என அனைவரும் கலந்துகொண்டனர். பக்தர்களின் விருப்பதிற்கேட்ப, அம்பாளுக்கு தனிப்பட்ட அர்ச்சனைகளும் பூஜிக்கப்பட்டன. இந்த நவராத்திரி விழாவினை எடுத்து நடத்தியது நமது விளக்குகடையின் வாடிக்கையாளர்களே! சென்ற வருடமும் ஆஷாட நவராத்திரி சிறப்பாக கடை வாடிக்கையாளர்களுடன் இனிதே நிறைவடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
முதல் நாள் ஆஷாட நவராத்திரி விழா
நம் அம்மன் வாராகி, அபிஷேகங்களில் அகங்குளிர்ந்து தாமரை மலர்கள் சூழ, மல்லிகை மாலையில், ஆயிரம் பூக்கள் அணிவகுத்து, அரளிப் பூக்கள் அர்ச்சனையில், பிடித்த நெய்வேதியங்கள் படையலை ஏற்று இளமை இலைகளில் வண்ணப்பட்டாடையில் மங்கள மணி வளையல்கள் அணிந்து, பாலாம்பிகையின் துணைகொண்டு பக்தியாளர்களுக்கும் பார்வையாளர்களுக்கும் அருள் புரிந்தாள்.
இரண்டாம் நாள் ஆஷாட நவராத்திரி விழா
இரண்டாம் நாள் ஆஷாட நவராத்திரி விழாவில் மஞ்சள்கள் சூழ, வாடா மல்லி மாலையில் வாடாத வாராகி அம்மன் பச்சை நிற அணிகலன்களுடன், செம்பட்டாடையில் இனிப்புகள் பலவும், நலம் தரும் உலர் பழங்களும் அவளுக்கு பிடித்த சர்க்கரைவள்ளிக் கிழங்குகளுடன் படைக்கப்பட்டு நம் அன்னையவள் வரங்களை அள்ளித் தந்தாள். தரிசிக்க பக்தர்கள் பலர் காத்திருந்து கண்டு வணங்கி, நம் விளக்குகடையில் பொருட்கள் பல வாங்கிச் சென்றனர்.
மூன்றாம் நாள் ஆஷாட நவராத்திரி விழா
வண்ண மாலைகள் சரங்கள் ஏழாய் அவளை அழகுற செய்ய, அக்கினியில் ஜொலித்த தங்கமாய் மஞ்சள் ஆடையில் மகிழ்ச்சிகரமாக, தாமரைப் பூக்கள் சூழ முக்கனி பழங்களோடு தெய்வக்குழந்தை சூரிய நாராயணனின் அமுத கானத்தில் ஆனந்தித்திருந்தாள் அன்னை வாராகி அன்று.
நான்காம் நாள் ஆஷாட நவராத்திரி விழா
வளையோசையில் மங்கள மற்றும் மாங்கல்ய பொருட்களும் படைக்கப்பட்டு சுவைஉணவுகள் வகை வகையாக இருக்க, நம் அம்மன் பட்டாடையில் பக்தர்களுக்கு அருள் புரிந்தாள்.
ஐந்தாம் நாள் ஆஷாட நவராத்திரி விழா
வெண்ணிற பூக்கோவையில், பன்னிர ரோஜாக்களின் நறுமணத்தில் போற்றிகள் நூற்றெற்று பாடி, சந்தனகாப்பு அலங்காரத்தில் சுடர்மிகு ஒளியில் மாலைகளும் மகுடங்களும் சூட நமது வாராகி வரங்களை வாரித்தந்தாள்.
ஆறாம் நாள் ஆஷாட நவராத்திரி விழா
கருவிழிகளை கவர்ந்த வண்ணத்தில் நவரத்தின கற்களின் ஒளிச்சுடரில் மெய்சிலிர்க்க மிளிர்ந்தாள் அன்னை. வண்ண பூக்கள் அவளை அலங்கரிக்க வாரி வழங்கினாள் தம் அருளை! பஞ்சமி திதியில் பக்தர்கள் கூடி, இனிப்புகள் வழங்க, இனிமையானவள் நம் வாராகி தாயை இன்னிசை குரல்நாயகி சுர்முகி அவர்கள் இசைக்கடலில் இன்புறச் செய்தார்
ஏழாம் நாள் ஆஷாட நவராத்திரி விழா
கன்னிப் பெண்கள் போற்றிகள் பல பாட, மணிமகள் அவளை மாலைகள் தழுவ, அறுசுவை உணவு படையலுடன் மலர் அர்ச்சனையில் அன்று மகிழ்ந்திருந்தாள் நம் வாராகி.
எட்டாம் நாள் ஆஷாட நவராத்திரி விழா
அரளிப் பூக்கள் அம்மனை அலங்கரிக்க, தும்பை நிற பட்டாடையில் பக்கத்தில் பாலாம்பிகையோடு பக்தர்களுக்கு அருள் வழங்கினார். பூஜைக்கு பின்னே பிரசாதங்கள் வழங்கப் பட்டன.
ஒன்பதாம் நாள் ஆஷாட நவராத்திரி விழா
ஆஷாட நவராத்திரியில் ஒன்பதாம் நாள் விழாவாக சிறப்பு அர்ச்சனைகள் செய்யப்பட்டு, அம்மன் அவள் அருளை பக்தர்களும் நம் கடை வாடிக்கையாளர்களும் சிறப்புறப் பெற்றனர்.
பத்தாம் நாள் ஆஷாட நவராத்திரி விழா
பத்தாம் நாள் விழாவில் பழ மாலைகள் தாங்கி, வண்ணப்பூக்கள் படர்ந்து பரிதியாய் பார்ப்போருக்கு காட்சிஅளித்தாள். அலங்காரங்களால் அன்னையவள் அன்று அழகுதேவதையாய் அருளை அள்ளித் தந்தாள்.பாரம்பரிய நடனங்களும் அரங்கேறின. பக்தர்களின் மனங்களும் நிறைந்திருந்தன
ஆஷாட நவராத்திரி நிறைவு விழா
புத்தாடைகளில் புதுப்பானையில் பொங்கலிட்டு இன்னிசைப் பாடல்கள் பல இசைக்கப்பட்டு பெண்கள் முளைப்பாரி சுற்றி கும்மியடித்து, அம்மனுக்கு பிடித்த அனைத்து நெய்வேதியங்களும் புதிதாக படைக்கப்பட்டு அம்மனின் அருளோடு இந்த ஆண்டுக்கான ஆஷாட நவராத்திரி விழா நமது விளக்குகடையில் இனிதே நிறைவுபெற்றது.
ஆஷாட நவராத்திரி விழாவில் கலந்துகொண்ட அனைத்து வாராகி பக்தர்களுக்கும் வாடிக்கையாளர்களுக்கும் விழாவினை சிறப்பாக செய்து முடிக்க உதவிய அனைத்து நல்லுள்ளங்களுக்கும் நன்றி.